Connect with us

Raj News Tamil

சென்னையில் காவல் நிலையம் அருகில் ஒருவர் அடித்துக் கொலை!

தமிழகம்

சென்னையில் காவல் நிலையம் அருகில் ஒருவர் அடித்துக் கொலை!

ஆவடி அருகே திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் ஒருவர் சரமாரியாக கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி காவல் ஆணையரத்துக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் ரவீந்திரன் நகர் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார்.

மேலும், அவரது உறவுக்காரரான கணேசனுக்கும் அவருக்கும் சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இன்று இருவருக்கும் ரவீந்திரன் நகர் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கணேசன் பலத்த இரும்பு ஆயுதங்களால் தனது மாமா குணசேகரனை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நான் கொலை செய்து விட்டதாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று கணேசன் சரண் அடைந்து நடந்ததைக் கூறவே இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாயில் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சரணடைந்த நபரிடம் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top