Connect with us

Raj News Tamil

பிரியாணி கடையில் ஒருவர் வெட்டி கொலை!

தமிழகம்

பிரியாணி கடையில் ஒருவர் வெட்டி கொலை!

சென்னையில் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலா என்பவர் பிரியாணி வாங்க மண்ணூர்பேட்டை கடைக்கு சென்றுள்ளார். அப்போது பிரியாணி வாங்க வந்த அயனாவரத்தை சேர்ந்த நெப்போலியன் உள்ளிட்ட சிலர் மீது பாலா மோதியதாக தெரிகிறது.

பின்னர் ஆத்திரம் அடைந்த மூவரும் பாலா உடன் சண்டை போட்டுள்ளனர். மது போதையில் இருந்த மூவரில் ஒருவர் பாலாவை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தொழிற்பேட்டை காவல்துறையினர் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை மூவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top