Connect with us

Raj News Tamil

கள்ளக்காதலனை வீட்டிற்கே அழைத்து உல்லாசம்.. மனைவிக்கு நடந்த கொடூரம்…

தமிழகம்

கள்ளக்காதலனை வீட்டிற்கே அழைத்து உல்லாசம்.. மனைவிக்கு நடந்த கொடூரம்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், ஜெயாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த அஸ்கர் அலி என்பவருக்கும், கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த ராஜா, தனது மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும், காதலை கைவிடாத ஜெயா, அஸ்கர் அலியை தனது வீட்டிற்கே அழைத்து, உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜா, தனது மனைவியை அரிவாளை கொண்டு, சரமரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜெயா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத ராஜா, அஸ்கர் அலி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான ஜே.சி.பி. வாகனங்களை தீயிட்டு எரித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதன்பிறகு, நடத்தப்பட்ட விசாரணையில், அஸ்கர் அலி செய்த துரோகத்தால், ஜே.சி.பியை ராஜா தீயிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராஜாவை கைது செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top