தமிழகம்
10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. கண்ட கண்ட இடங்களில் கடித்து வைத்த கொடூரம்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வ.உ.சி நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார். கட்டிட தொழில் செய்து வரும் இவர், வடமதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். மேலும், சிறுவனை தனியாக அழைத்த சென்ற மனோஜ்குமார், அந்தரங்க உறுப்புகளை கடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் மனோஜ்குமாரை கைது செய்தனர்.
You must be logged in to post a comment Login