தமிழகம்
குழந்தை இல்லை.. விரக்தியில் பிறப்புறுப்பை அறுத்துக் கொண்ட நபர்..
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு, அனிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ்குமார், மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை வீட்டிற்குள் நுழைந்த சந்தோஷ்குமார், தனது கையில் இருந்த பிளேடை எடுத்து, பிறப்புறுப்பை அறுத்துக் கொண்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத விரக்தியில் ஆணுறுப்பை வெட்டிக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login