மனைவி பிரிந்து சென்றதால் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவர்..!

பீகார் மாநிலம் மேதாபூரா பகுதியை சேர்ந்த வாலிபர் கிருஷ்ணா. 25 வயதான இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோதுமை மண்டியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர்.

கிருஷ்ணா விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்த போது தனது மனைவி கோபித்துக்கொண்டு மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் கிருஷ்ணா கத்தியை எடுத்து தனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் பதறிப்போய் வந்து பார்க்கையில் அவர் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.

உடனடியாக கிருஷ்ணாவை பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள், முழுமையாக குணமடைந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News