Connect with us

Raj News Tamil

“நீ வரமாட்டியா” – மறுப்பு சொன்ன கள்ளக்காதலி..! மகனை கொன்ற காதலன்!

தமிழகம்

“நீ வரமாட்டியா” – மறுப்பு சொன்ன கள்ளக்காதலி..! மகனை கொன்ற காதலன்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தாங்கல் பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், மதன், ஜீவா ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். மதுவுக்கு அடிமையான இளஞ்செழியன், அடிக்கடி மது அருந்திவிட்டு, மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த தனலட்சுமி, தன்னுடன் பணிபுரிந்து வந்த கார்த்திக் என்பவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதற்கிடையே, இளஞ்செழியனின் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கு, போதை மறுவாழ்வு மையத்தில் தனலட்சுமி சேர்த்துள்ளார்.

இதையடுத்து, கணவர் இல்லாமல் சுதந்திரமாக கார்த்திக் உடன் தனலட்சுமி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து, 5 வருடங்களுக்கு பிறகு, இளஞ்செழியன் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். தனது தந்தை திருந்தி வந்ததை தனலட்சுமியிடம் கூறிய அவரது மகன் மதன், மீண்டும் இளஞ்செழியன் உடன் வாழ வருமாறு கூறியுள்ளார்.

மகன் உருக்கமாக கேட்டதையடுத்து, தனலட்சுமியும் அவருடன் சென்றுவிட்டார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த கார்த்தி, தனலட்சுமியின் வீட்டிற்கு சென்று, அவரது மகன் மதனை கத்தியால் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

மதனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி, மதன் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளி கார்த்திக்கை கைது செய்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top