Connect with us

Raj News Tamil

தொடர்ந்து காணாமல் போன உள்ளாடைகள்.. செல்போன் வைத்து கண்டுபிடித்த பெண்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..

இந்தியா

தொடர்ந்து காணாமல் போன உள்ளாடைகள்.. செல்போன் வைத்து கண்டுபிடித்த பெண்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..

குஜராத் மாநிலம் தந்துகா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர், தன்னுடைய ஆடைகளை துவைத்து, மொட்டை மாடியில் காய வைத்து வந்துள்ளார்.

இந்த துணிகளில், உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து காணாமல் போயுள்ளது. இதனை ஆரம்பத்தில் கவனிக்காத அந்த பெண், ஒரு கட்டத்தில் கண்டுபிடித்துள்ளார்.

யார் இதை செய்கிறார்கள் என்று கண்டறிவதற்காக, தன்னுடைய செல்போனை மறைமுகமாக வைத்து, வீடியோ எடுக்க முடிவு செய்தார். அதன்படி, உள்ளாடைகளை காய வைத்துவிட்டு, செல்போனை மறைத்து வைத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

வழக்கம் போல், உள்ளாடை காணாமல் போனதையடுத்து, தனது செல்போனில் யார் எடுத்திருப்பார்? என்று ஆவலோடு பார்த்துள்ளார். அதில், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் தான், இத்தனை நாட்களாக இந்த வேலையை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது வீட்டிற்கு சென்று, அந்த பெண் கலாட்டாவில் ஈடுபட்டார். இதற்கிடையே, அந்த நபர் உள்ளாடையை திருடும் வீடியோ வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top