கோவை மாவட்டத்தில் உள்ள முதலாவது குற்றவியல் நீதிமன்றத்திற்கு, சித்ரா என்ற பெண் வந்துள்ளர். அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து, சித்ராவின் மீது வீசியுள்ளார்.
இதனால் அலறித் துடித்த அவரை, அருகில் இருந்து வழக்கறிஞர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ஆசிட் வீசிய நபரை மடக்கி பிடித்த வழக்கறிஞர்கள், காவல்துறையில் ஒப்படைத்தனர்.
தற்போது, ஆசிட் நபரை கைது செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் நீதிமன்ற வளாகத்திலேயே, பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.