Connect with us

Raj News Tamil

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி காரில் கடத்திய மர்மநபர்! கல்வீசிய பொதுமக்கள்!

இந்தியா

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி காரில் கடத்திய மர்மநபர்! கல்வீசிய பொதுமக்கள்!

பெங்களூருவில் இன்று காலை காரில் வந்த மர்மநபர் கத்தியால் குத்தி, கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ராமநகராவில் ஐ,பி சாலையில் ஜூனியர் கல்லூரி ஒன்று செயலாய்[ஆட்டு வருகிறது. இந்த கல்லூரி அருகே இன்று காலை மாணவி ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்,அப்போது திடீரென அங்கு காரில் வந்த மர்மநபர், அந்த மாணவியைக் கத்தியால் குத்தி காருக்குள்ளே தள்ளினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அந்த காரின் மீது கற்களை எடுத்து வீசியதாக தெரிகிறது. ஆனாலும், அந்த மர்மநபர் மாணவியைக் கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் கடத்திச் சென்றார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராம்நகர் டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அத்துடன் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்ற கார் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top