Connect with us

Raj News Tamil

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!

தமிழகம்

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

காவல் கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மர்ம நபர் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கவுள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தது வியாசர்யாடியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

More in தமிழகம்

To Top