இந்தியா
தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கொடூரமாக தாக்கும் பன்றி – வைரல் வீடியோ
மராட்டிய மாநிலம் கொண்டா மாவட்டத்தில் 3 சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு பன்றி வேகமாக வந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கொடூரமாக தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் அலறி கூச்சலிட்டான்.
சிறுவனின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பன்றியை விரட்டி சிறுவனை மீட்டனர். பன்றி தாக்கியதில் சிறுவன் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சிறுவனை பன்றி தாக்கிய சம்பவம் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை பன்றி கொடூரமாக தாக்கும் வீடியோ pic.twitter.com/nQfCmqixBS
— Raj News Tamil (@rajnewstamil) March 14, 2023
You must be logged in to post a comment Login