Connect with us

Raj News Tamil

பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி: வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் வரை டெபாசிட்!

Trending

பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி: வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் வரை டெபாசிட்!

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் நேற்று முன்தினம் பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை டெபாசிட் ஆனது. இதனை கண்ட வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே ஒரு சிலர் தங்களது வங்கி கணக்கில் டெபாசிட்டான பணத்தை உடனே சென்று ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்தனர். மேலும் ஒரு சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்தனர். இந்த செய்தி மாநிலம் முழுவதும் தீயாய் பரவியது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

எஸ்.எம்.எஸ் வராத வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரி பார்த்தனர். இதேபோல் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.

வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் ஆனது என்பது குறித்த விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

More in Trending

To Top