Connect with us

Raj News Tamil

வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் – 5 பேர் கைது

இந்தியா

வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் – 5 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து வெடிபொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என பயங்கரவாத அமைப்பு பயிற்சி வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த 5 பேரும் பெங்களூருவில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top