தமிழகம்
யார் சாமி நீ….மின்கம்பத்தை அகற்றாமல் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்..
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கல்லூர் கிராமத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கழிவு நீர் கால்வாய் அமைக்கும் இடத்தில் மின்கம்பம் இருந்துள்ளது. அதனை அகற்றாமல் மூன்று மின்கம்பத்தை நடுவில் வைத்து கழிவு நீர் கால்வாய் அமைத்துள்ளனர். இதனால் கழிவு நீர் செல்லமுடியாமல் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மின்கம்பம் சேதம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது.
அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login