சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் ஆலாவூரணி அண்ணா காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் (53). இவர் தனது மனைவி லட்சுமி, மகன் முனியாண்டியுடன் டீக்கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது வாகனத்தின் முன்பகுதியில் பதுங்கி யிருந்த கட்டுவிரியன் பாம்பு, வெங்கடேசனை கையில் கடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கடித்த பாம்பை அடித்துக் கொன்று பாம்புடன் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் வெங்கடேசனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி பெற்ற வெங்கடேசன், மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.