Connect with us

Raj News Tamil

மின்னல் தாக்கியதில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர் பலி..!!

தமிழகம்

மின்னல் தாக்கியதில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர் பலி..!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (28). இவர் லால்குடி அருகே குமுளூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை முதல் லால்குடி பகுதியில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது. வீட்டிலிருந்த ஜெயக்குமார் ப்ளூடூத் மூலம் தனது செல்போனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயக்குமார் மீது இடி மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டார் எனக் கூறினர்.

இது குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More in தமிழகம்

To Top