ஏசி வெடித்து அடிக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (மே.30) ஏசி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லி எல்லையில் உள்ள நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏர் கண்டிஷனிங் யூனிட் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பிளாட் முழுவதும் தீ பரவியது.

மேலும், அங்கு உள்ள குடியிருப்பு வளாகம் முழுவதும் கரும்புகை பரவியதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் அனைவரும் குடியிருப்பில் இருந்து வெளியேறினர்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த தீ விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால், பொதுமக்கள் அதிக அளவில் ஏசி, ஏர்கூலர் போன்ற குளிரூட்டும் சாதனங்களை பயன்படுத்தி வருகின்ற நிலையில், குடியிருப்பில் ஏசி வெடித்து தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News