Connect with us

Raj News Tamil

சுற்றலா பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து! – 8 பேர் பலி

தமிழகம்

சுற்றலா பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து! – 8 பேர் பலி

சென்னை வடபழனியில் இருந்து ஐதராபாத்துக்கு 23 பயணிகளுடன் சுற்றலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த லாரி ஒன்று சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதாமல் இருக்க வலதுபுறமாக செல்ல முயன்ற போது எதிரே வந்த சுற்றுலா பேருந்து மீது அதிபயங்கரமாக மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top