இந்தியா
லாரி மோதியதில் பேருந்து நிறுத்தத்தில் நின்ற கொண்டிருந்த 6 பேர் பலி..!
மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் சுமார் 20 பேர் காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
லாரி ஓட்டுநர் லாரியை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது.
லாரியை பறிமுதல் செய்த காவல்துறை ஓட்டுநரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் நரேந்திர குமார் சூர்யவன்ஷி, “விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 8 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். லாரி ஓட்டுநரை காவல்துறை தேடிவருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் லாரி மோதியதில் பேருந்து நிறுத்தத்தில் நின்ற கொண்டிருந்த 6 பேர் பலி..!#MadhyaPradesh #viralvideo pic.twitter.com/Gh7laUuIJm
— Raj News Tamil (@rajnewstamil) December 5, 2022
You must be logged in to post a comment Login