Connect with us

Raj News Tamil

பால் ஏற்றி வந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து!

தமிழகம்

பால் ஏற்றி வந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து!

சென்னையை அடுத்த பழவந்ததாங்கல் பகுதிக்கு வந்தவாசியில் இருந்து கேன் மூலம் 1600 லிட்டர் பசும்பாலை டெலிவரி செய்வதற்காக சரக்கு வேனில் ஏற்றி கொண்டு வந்தது.

வேனை திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை சேர்ந்த செல்வ மகாராஜன்(38) என்பவர் ஒட்டி வந்தார். பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் வந்த போது திடீரென சரக்கு வேன் வாகனம் நிலை தடுமாறி சுவற்றில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் டிரைவர் செல்வ மகாராஜன், கிளீனர் கலையரசன் ஆகியோருக்கும் இடது தோள்பட்டையில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சாலையில் கவிழ்ந்த பால் வண்டியை கிரேனை மூலம் போலீசார் அகற்றி போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top