Connect with us

Raj News Tamil

கெத்து காட்ட நினைத்த மனைவி; கையோடு வந்த முடி: அதிர்ச்சி அடைந்த கணவன்!

Trending

கெத்து காட்ட நினைத்த மனைவி; கையோடு வந்த முடி: அதிர்ச்சி அடைந்த கணவன்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஓல்ட் சிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நீண்ட தலைமுடியை கணவர் ஆசைப்பட்டதால் ஸ்டைலாக வெட்டுவதற்காக அபிட்ஸ் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தலைமுடிக்கு ஒருவிதமான எண்ணெய் தடவிய உடன் முடி கொட்ட ஆரம்பித்தது. சிறிது நேரத்திலேயே தலையில் இருந்த முடிகள் எல்லாம் உதிர்ந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீட்டிற்கு ஓடியுள்ளார்.

வீட்டில் இருந்த கணவர் மனைவியின் தலையில் முடி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனார். பின்னர் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது தலையில் இருந்து உதிர்ந்த தலைமுடியை கையில் எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையம் சென்றார்.

தனது தலைமுடியை இழக்க காரணமான பியூட்டி பார்லர் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More in Trending

To Top