Connect with us

Raj News Tamil

சென்னையில் அரசு பேருந்து மோதி பெண் தலை நசுங்கி பலி..!

தமிழகம்

சென்னையில் அரசு பேருந்து மோதி பெண் தலை நசுங்கி பலி..!

கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி வித்யா(34). இவர் சென்னை பாடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வித்யா செல்லும்போது தாதா குப்பம் கொரட்டூர் சிக்னலில் சிக்னலுக்காக வித்யா நின்றுள்ளார். அப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மாதவரம் நோக்கி சென்ற அரசு பேருந்து சிக்னலை கவனிக்காமல் வித்யாவின் இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி உள்ளது.

இதனால் நிலை தடுமாறிய வித்யா கீழே விழுந்த்தில் பேருந்தின் முன் சக்கரம் வித்யாவின் தலை மீது ஏறி இறங்கி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே வித்யா தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

More in தமிழகம்

To Top