Connect with us

Raj News Tamil

சார்ஜ் போட்டபடியே போன் பேசியதால் மொபைல் வெடித்து பெண் பலி..!!

தமிழகம்

சார்ஜ் போட்டபடியே போன் பேசியதால் மொபைல் வெடித்து பெண் பலி..!!

தஞ்சாவூரை சேர்ந்த கோகிலா (வயது 32) என்பவர் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவர் இன்று தனது கடையில் செல்போனை சர்வீஸ் செய்துகொண்டிருந்தபோது, மற்றொரு போனை சார்ஜ் போட்டபடியே பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது மின்கசிவு காரணமாக திடீரென பேட்டரி வெடித்து செல்போன் தீப்பிடித்தது.செல்போன் வெடித்ததில் படுகாயம் அடைந்த கோகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் வெடித்து பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top