Connect with us

Raj News Tamil

ஒரே ஒரு கட்டை.. 2 துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய வீரப்பெண்!

இந்தியா

ஒரே ஒரு கட்டை.. 2 துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய வீரப்பெண்!

புலியை முறத்தால் அடித்து துரத்திய பெண்கள், தமிழ்நாட்டில் இருந்தார்கள் என்று கூற்று ஒன்று உள்ளது. அந்த கூற்றுக்கு உயிர் சேர்க்கும் விதமாக இன்னொரு சம்பவம், ஹரியானா மாநிலத்தில் நடந்து, பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

ஹரியானா மாநிலம் பிவானி பகுதியை சேர்ந்தவர் ஹரிகிஷன். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்றிருந்த இவர், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 7.30 மணிக்கு, தனது வீட்டின் வெளியே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, ஹரிகிஷனை துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளனர்.

இந்த தாக்குதலில், ஹரிகிஷன் மீது, 4 குண்டுகள் பாய்ந்து, படுகாயம் அடைந்துள்ளார். ஆனால், அப்போது, அங்கிருந்த பெண் ஒருவர், மர்ம கும்பல்களை பெரிய கட்டையை வைத்து, அடித்து துரத்தியுள்ளார்.

இதையடுத்து, ஹரிகிஷன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மர்ம நபர்களை தேடி வருகின்னர். இதற்கிடையே, மர்ம நபர்களை, அந்த பெண் துரத்தியடிக்கும் வீடியோ, இணையத்தில் கசிந்து, வைரலாகி வருகிறது.

More in இந்தியா

To Top