வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து? பாதுகாப்பு குளறுபடியா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு, காலை 7 மணி முதல் தற்போது வரை நடந்து வருகிறது.

இந்நிலையில், டி-கொசப்பாளையில் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்துவதற்காக கனிமொழி என்ற பெண் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஏழுமலை என்ற நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அந்த பெண்ணை குத்தியுள்ளார்.

அந்த பெண் அலறி துடித்தையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர், ஏழுமலையை கைது செய்தனர். பின்னர், அவரை கஞ்சனூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற அவர்கள், விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அந்த பெண்ணின் முன்னாள் கணவர் தான் ஏழுமலை என்பது தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக, இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலை தற்போது மது போதையில் இருப்பதால், இன்று மாலை தான், விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது. இந்த கத்தி குத்து சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News