Connect with us

Raj News Tamil

சிரிப்பை மாற்ற நினைத்து உயிரை பறிகொடுத்த இளைஞர்..!

இந்தியா

சிரிப்பை மாற்ற நினைத்து உயிரை பறிகொடுத்த இளைஞர்..!

ஹைதராபாத்தை சேர்ந்த லக்ஷ்மி நாராயண விஞ்சம்(28) என்பவருக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிச்சயதார்த்த புகைப்படத்தில் இன்னும் கொஞ்சம் சிரித்தபடி இருந்திருப்பின் நன்றாக இருக்கும் என நண்பர்கள், உறவினர்கள் குறிப்பிட்டு இருந்ததால், அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள எண்ணினார்.

இதையடுத்து, பிப்ரவரி 16 அன்று ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸில் உள்ள ’எஃப்.எம்.எஸ் சர்வதேச பல் மருத்துவமனை’யில் ‘ஸ்மைல் டிசைனிங்’ அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இரண்டு மணி நேர அறுவைசிகிச்சையின்போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோர் உட்பட எவரிடமும் லஷ்மி நாராயணன் இது குறித்து தெரிவிக்கவில்லை என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அறுவைசிகிச்சைக்கான மயக்க மருந்தினை அதிகம் கொடுத்ததே மகன் லஷ்மி நாராயணன் இறப்பிற்கு காரணம் என்றும், மகனுக்கு வேறு எந்த உடல்நலக் குறைவும் இதற்கு முன்பு இல்லை என்றும் அவரது தந்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top