தவறி விழுந்த செல்போன்…எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (25) கடந்த இரண்டு மாதங்களாக எருமையூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்,

இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் எதிரே உள்ள கல்குவாரி கரை மேல் உட்கார்ந்து செல்போனில் பேசி கொண்டிருந்த போது தவறி கல்குவாரியில் விழுந்த செல்போனை பிடிக்க முயன்ற போது ஜெயராமன் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சோமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையினர் நீர் மூழ்கி கருவிகளுடன் நீண்ட நேரம் போராடி ஜெயராமன் உட்லை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News