Connect with us

RajNewsTamil

மீண்டும் மனைவியுடன் சேர்ந்த ரஜினியின் வில்லன்!

சினிமா

மீண்டும் மனைவியுடன் சேர்ந்த ரஜினியின் வில்லன்!

பாலிவுட் முன்னணி நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். இவர், ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம், தமிழில் அறிமுகமாகி, ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

திரைத்துறையில் இவர் முக்கியமான இடத்தை அடைந்திருந்தாலும், சொந்த வாழ்க்கையில் பல்வேறு சவாலா சூழல்களை சந்தித்துள்ளார்.

அதாவது, நவாசுதீன் சித்திக்கிற்கு ஆலியா பாண்டே என்ற மனைவியும், ஷோரா என்ற மகளும், யாணி என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நவாசுதீன் சித்திக் தனது மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும் மீண்டும் இணைந்துள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய நவாசுதீனின் மனைவி ஆலயா, கடந்த சில நாட்களில், சில விஷயங்கள் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

கெட்ட விஷயத்தை பகிரும்போது, நல்ல விஷயத்தை பகிர வேண்டும் என்று எனக்கு தோன்றியது. எனவே, நாங்கள் எங்களது திருமண தினத்தை, எங்கள் குழந்தைகளுடன் கொண்டாடினோம் என்று கூறியுள்ளார்.

இவரது இந்த பேட்டியின் மூலம், இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

More in சினிமா

To Top