ஆவின் நிறுவனம் பால், தயிர், முறுக்கு, பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்து வருகிறது.

ஆவின் நிறுவனம் தற்போது பிளாஸ்டிக் பாக்கெட்டில் பாலை அடைத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ஆவின் நிறுவனம் பாலை கண்ணாடி பாட்டில்களை அடைத்து விற்பனை செய்வது பற்றி சோதனை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் ஆவின் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக ஏதேனும் ஒரு மாநகராட்சி அல்லது பகுதியை தேர்வு செய்து அங்கு மட்டும் ஆவின் பாலை சோதனை அடிப்படையில் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கும்படி அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.