மெட்ரோ ரயில் நிலைய வாசலில் ஆசிட் வீச்சு: 5-க்கும் மேற்பட்டோர் காயம்!

மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்த மக்கள் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் சாலையோரம் வசிக்கக் கூடிய மக்கள் படுத்து உறங்கியுள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில், அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஆசிட் பாட்டிலை வீசி உள்ளனர். இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 5 க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்துள்ளனர்.

அந்த பகுதி முழுவதும் ஆசிட் நெடி வீசியதுடன், சிறிது நேரம் அப்பகுதியில் இருந்த மற்றவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த கிண்டி போலீசார், ஆசிட் வீச்சு குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News