தமிழகம்
எடப்பாடி பழனிசாமிக்காக தீச்சட்டி எடுக்க போறேன் – நடிகர் கஞ்சா கருப்பு பேட்டி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளே ஒரு முருகன் கோவிலில் பால்குடம் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் கஞ்சா கருப்பு கலந்து கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆனதற்கும் விரைவில் அடுத்த முதலமைச்சர் ஆவதற்கும் நான் சமயபுரம் முத்துமாரியம்மனுக்கு அக்னி சட்டி எடுக்க போகிறேன் என அவர் கூறியுள்ளார்.
தற்போது உள்ள ஆட்சியில் மின்சார கட்டணம் வீட்டு வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் இந்த கட்டண உயர்வுகள் இருந்திருக்காது.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் அடுத்த தேர்தலில் முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login