தமிழகம்
நடிகர் கருணாஸ் மீண்டும் கமிஷ்னரிடம் புகார்!
நடிகர் கருணாஸ் என் மீது வன்மம் கொண்டு அவதூறு மற்றும் அறுவருக்கத் தக்க வகையில் பொய்யான தகவலை பரப்பி வந்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜீவ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஏற்கனவே நடிகர் கருணாஸ் புகார் அளித்திருந்தார்.
நேற்று மீண்டும், யூடியூப் சேனலில் தவறான தகவலை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கனாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷ்னரிடம் கருணாஸ் புகார் செய்தார்.