சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு, சாய் அபயங்கர் தான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கடும் கோபம் அடைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சின்னத்திரை காமெடி நடிகர் கோதண்டம், ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், ஆயிரம் துணை நடிகர்களுக்கு பதிலாக, 400 துணை நடிகர்கள் மட்டும் வந்ததால், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கோபம் அடைந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, அன்றைய நாளுக்கான படப்பிடிப்பை, இயக்குநர் நிறுத்திவிட்டதாகவும், அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய கோதண்டம், சூர்யா 45 படத்தை, ஆர்.ஜே.பாலாஜி மிகவும் நுட்பமாக படமாக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.