Connect with us

Raj News Tamil

காந்தியை கொலை செய்தவர்கள் எப்படி ஜெய் பீம் படத்திற்கு விருது தருவார்கள்? பிரகாஷ் ராஜ் ட்விட்

சினிமா

காந்தியை கொலை செய்தவர்கள் எப்படி ஜெய் பீம் படத்திற்கு விருது தருவார்கள்? பிரகாஷ் ராஜ் ட்விட்

கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான 69 வது தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ‘கடைசி விவசாயி’ படத்திற்கு இரண்டு விருதும், ‘இரவின் நிழல்’ படத்தில் இடம் பெற்ற மாயவாத் தூயவா பாடலைப் பாடிய பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக ஆர் ஆர் ஆர் திரைப்படம் மட்டுமே 6 தேசிய விருதுகளை கைப்பற்றியது. அதேபோல் தெலுங்கு திரையுலகில் முதல் முறையாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா படத்திற்காக அறிவிக்கப்பட்டது.

தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன், போன்ற படங்களுக்கு ஒரு தேசிய விருது கூட கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top