Connect with us

Raj News Tamil

ரசிகர்களின் நலனுக்கு லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு!

சினிமா

ரசிகர்களின் நலனுக்கு லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு!

நடன கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ், நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகக் கலைஞராக வளம் வந்துக் கொண்டிருக்கிறார்.

இதுமட்டுமின்றி, சமூக சேவையிலும் ஆர்வம் கொண்ட இவர், பலருக்கும் தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் வணக்கம். சென்ற முறை, நான் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

அப்போது, என்னுடன் புகைப்படம் எடுப்பதற்காக வந்திருந்த எனது ரசிகர் ஒருவர், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம், என் மனதை நொறுக்கிவிட்டது.

அந்த சம்பவத்தில் இருந்து, என் ரசிகர்கள் என்னை பார்க்க வரவேண்டாம் என்றும், நானே நேரில் சென்று அவர்களை பார்க்க வேண்டும் என்றும் முடிவு செய்துவிட்டேன்.

அவர்கள், அப்போது என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இதன் தொடக்கமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள லோக லஷ்மி மஹாலில், நாளை முதல் இந்த செயலை தொடங்க உள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களின் நலனுக்காக லாரன்ஸ் எடுத்துள்ள இந்த முடிவு, நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

More in சினிமா

To Top