Connect with us

Raj News Tamil

நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு – அக்டோபர் 30-ல் விசாரணை!

சினிமா

நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு – அக்டோபர் 30-ல் விசாரணை!

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிப்பில், கடந்த 2015-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் புலி. இந்த படத்திற்காக பெற்ற சம்பளத்தில், நடிகர் விஜய் 15 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை என்று, புகார் எழுந்தது.

இந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு அன்று, வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் முடிவில், 15 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், நடிகர் விஜய்-க்கு 1.50 கோடி ரூபாய், அபாராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், இதனை மறுத்த விஜய், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை, அக்டோபர் 30-ஆம் தேதிக்கு, ஒத்திவைத்தனர்.

More in சினிமா

To Top