சினிமா
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நடிகை கஸ்தூரி..!
சமூக அக்கறையுடன் பேசுவதாக நினைத்து அடிக்கடி சர்ச்சைகைக்குள் சிக்கும் நடிகை கஸ்தூரி தற்போது மது வாங்கும் பெண்களின் வீடியோவை பகிர்ந்து ‘தண்ணி அடி பெண்ணே தண்ணியடி எட்டும் அறிவினிலே ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காணென்று தண்ணி அடி’ என்றும் மகளிர் உரிமைத்தொகை சிந்தாம சிதறாமல் அப்படியே திரும்பிவிடும் என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவதோடு பலரது விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் கஸ்துரியை கண்டித்து மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன்,தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதாவது பணக்கார பெண்கள் மது அருந்தினால் தப்பில்லை சாமானிய பெண்கள் மது அருந்தினால் தவறா? என்று கேட்டுள்ளார். மேலும் மது அருந்துவது உடல் நலத்தை மட்டும் தான் பாதிக்கும் ஆனால் ஆதிக்க உணர்வு ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இயக்குனரும் நடிகருமான நவீனின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் தங்களது ஆதரவை தெரிவித்துவருகின்றனர்.