உலகம்
கைலாசா நாட்டுக்கு பிரதமராகும் நடிகை ரஞ்சிதா?? இது என்னடா புதுசா இருக்கு..
கடத்தல் மற்றும் பாலியல் வழக்குகளில் தேடப்பட்ட சாமியார் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். இதையடுத்து கைலாசா என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்தார் . இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நித்யானந்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன் பிறகு சமூக வலைதளங்களில் தோன்றி பேச ஆரம்பித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இணையதள செயலியான லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம் நித்யானந்தா மாயி சுவாமி என்ற தலைப்பில் இருந்தது. அதற்கு கீழே கைலாசாவின் பிரதமர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.