Connect with us

Raj News Tamil

“5 அடி 4 அங்குல பூவுக்கு பிறந்த நாள்.. 40 வயசு.. நம்பலனாலும் அதுதான் நெசம்..” த்ரிஷாவின் பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு..!

சினிமா

“5 அடி 4 அங்குல பூவுக்கு பிறந்த நாள்.. 40 வயசு.. நம்பலனாலும் அதுதான் நெசம்..” த்ரிஷாவின் பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு..!

பூவுக்கு பிறந்த நாள் என்று கூறினால், நம்ப முடிகிறதா.. ஆம்.. 5 அடி 4 அங்கும் கொண்ட ஒரு பூ, இன்று தான் இந்த பூமியில் மலரச் செய்தது. அந்த பூவுக்கு, இன்றுடன் 40 வயதாகிறது. கொடுக்கப்பட்ட துப்புகளை கொண்டே கண்டுபிடித்திருப்பீர்கள் அது த்ரிஷா என்று.. ஆம், இன்று த்ரிஷாவின் பிறந்த நாள்.. இன்றைய தினம், அவரை பற்றிய சில சிறப்பு தகவல்களை காணலாம்..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வென்டில், பள்ளிப் படிப்பை தொடங்கியவர் நடிகை த்ரிஷா. 16 வயதிலேயே மிஸ் சென்னை பட்டத்தை பெற்ற இவர், ஜோடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, மௌனம் பேசியதே என்ற படத்தில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

இவ்வாறு படிப்படியாக நடிப்பு பயணத்தை தொடங்கிய த்ரிஷா, சாமி படத்தின் மூலம் தான், தமிழ் ரசிகர்களின் மனதில், நீங்க இடம் பிடித்தார். அன்றில் இருந்து இன்று வரை த்ரிஷா திரைப்பயணம், ஏறுமுகத்தில் தான் இருந்து வருகிறது.

“சாமி படத்தில் புவனா, கில்லி படத்தில் தனலட்சுமி, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜெசி” இந்த படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், அத்தனை உயிர்ப்புடன் இருப்பதற்கு இயக்குநர் ஒரு காரணமாக இருந்தாலும், அதில் த்ரிஷாவின் பங்கு என்பது அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்..

ஹீரோயினாக நடிக்கத் தொடங்கிய சிலர், தொடர்ந்து பல படங்களில் நடிப்பார்கள். பின்னர், மார்கெட் குறையும், அதன்பிறகு, குணசித்திர வேடங்களில் நடிப்பார்கள்.. பின்னர், சினிமாவில் இருந்து விலகிவிடுவார்கள்.

ஆனால், 2003-ல் ஹீரோயினாக மாறிய த்ரிஷா, இன்று வரை ஹீரோயினாக மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது, சினிமா உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

திறமை ஒரு புறம் இருந்தாலும், இவரது அழகும், ரசிகர்களை திணற வைக்கிறது என்று சொல்ல வேண்டும்.. அதிக கவர்ச்சியான ஆடைகள் எதுவும் இல்லாமலே ரசிகர்களை வசியம் செய்யும் திறமையை எங்கிருந்து தான் கற்றுக் கொண்டாரே..

படுத்த படுக்கையாக கிடக்கும் கிழவன்
எழுந்து நிற்பான்
பம்பரமாக சுற்றும் இளைஞன்
அசையாது கிடப்பான்
ஆசையாய் அம்மா வைத்த பெயரையே
எளிதில் மறப்பான்
உடலில் றெக்கை வந்ததை போல்
வானில் பறப்பான்..
இத்தனையும் அழகாய் நடக்கும்
இவள் நடந்தால்..
பூக்களும் கண்ணீர் வடிக்கும்
இவள் சூட்டிக் கொள்ள மறுத்தால்..

இவ்வாறு கவிதை பாடி தான், த்ரிஷாவின் அழகை வர்ணிக்க முடிகிறது என்றால் பாருங்களேன்..

அழகு, திறமை, தனித்துவம் என்று பல்வேறு அம்சங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா, இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கேட்பதற்கு நம்ப முடியாமல் இருந்தாலும் அதுதான் நிஜம். எனவே, அவரது பிறந்த நாளை யொட்டி, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் த்ரிஷாவின் புராணத்தை பாடி வருகின்றனர்..

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top