புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை 6 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.