“ரஜினிக்கு பிறகு சமந்தா தான்” – மேடையில் பேசிய பிரபல இயக்குநர்!

வாசன் பாலா இயக்கத்தில், ஆலியா பட் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ஜிக்ரா. இந்த திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா, ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஆலியா பட், சமந்தா, இயக்குநர் திரிவிக்ரம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

அப்போது பேசிய திரிவிக்ரம், “ரஜினிக்கு பிறகு, நடிகை சமந்தாவுக்கு தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், இதனை முழு மனதுடன் சொல்கிறேன் என்று கூறிய அவர், சமந்தா தெலுங்கு மொழியிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதுமட்டுமின்றி, அவர் சரி என்று சொன்னால், அவருக்காக படங்கள் கொண்டு வர நான் ரெடி” என்றும் அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News