தமிழகம்
மக்களை வாட்டி எடுத்த அக்னி நட்சத்திரம்…நாளையுடன் முடிகிறது
ஒவ்வொரு ஆண்டும் மே 4-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த காலகட்டத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்.
கடந்த மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் வெயில் உள் மாவட்டங்கள் மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களிலும் கடும் வெயில் சுட்டெரித்தது.
நேற்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் திருத்தணியில் தலா 107 டிகிரயும் வேலூரில் 106 டிகிரியும் வெப்பம் பதிவானது.
இந்நிலையில் ஒருவழியாக நாளையுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. இருப்பினும் ஒரு சில தினங்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என கூறப்படுகின்றது.
You must be logged in to post a comment Login