Connect with us

Raj News Tamil

அதிமுக நிர்வாகி வெட்டிக் படுகொலை!

தமிழகம்

அதிமுக நிர்வாகி வெட்டிக் படுகொலை!

அதிமுக பிரமுகர் நேற்று நள்ளிரவு, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சேலம், கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளராக இருந்து வந்தவர் சண்முகம் (54). இவர் நேற்று இரவு தாதகாபட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சண்முகத்தை வழிமறித்த மர்ம நபர்கள் திடீரென அவரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்த சண்முகத்தின் மனைவி மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதே போல், அதிமுக நிர்வாகிகளும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்களும், கட்சி நிர்வாகிகளும் சண்முகத்தின் உடலை போலீசார் எடுக்க விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசியல் முன் விரோத காரணமாக இந்த கொலை நடந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top