உலகம்
விமான எஞ்சினுக்குள் சிக்கிக்கொண்ட நபர்….உடல் சிதைந்து பலி
டெல்டா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று அமெரிக்காவின் டெக்சாஸ் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது.
பயணிகள் இறங்கிய பின்னரும், விமானத்தின் ஒரு எஞ்சின் சுற்றிக் கொண்டே இருந்துள்ளது. அப்போது விமானத்தின் அருகே சென்ற பணியாளர் ஒருவரை எஞ்சின் உள்ளே இழுத்துக் கொண்டது. அதில் அவர் உடல் சிதைந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த ஊழியரின் உடலை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login