Connect with us

Raj News Tamil

தொகுப்பாளினி எழுப்பிய கேள்வி.. கடுங்கோபம் அடைந்த ஐஸ்வர்யா ராய்..

சினிமா

தொகுப்பாளினி எழுப்பிய கேள்வி.. கடுங்கோபம் அடைந்த ஐஸ்வர்யா ராய்..

மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் திரைப்படத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.

அந்த படத்திற்கு பிறகு, பாலிவுட்டில் அறிமுகமான இவர், சல்மான் கான், ரித்திக் ரோஷன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். சில ஆங்கில படங்களிலும், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இவரை தொகுப்பாளினி ஒருவர் சமீபத்தில் பேட்டி எடுத்திருக்கிறார். இந்த பேட்டியில், பாலிவுட்டில் இருந்து விலகி, முழுநேரமாக ஹாலிவுட் நடிக்க இருப்பது தொடர்பாக பரவும் செய்தி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இந்த கேள்வியை கேட்டதும், கடுங்கோபம் அடைந்த ஐஸ்வர்யா ராய், “எதற்காக பேட்டிக்கு அழைத்தீர்களோ, அது பற்றி மட்டும் கேளுங்கள்” என்று ஆவேசமாக கூறினார். இவரது இந்த பேட்டி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top