மீண்டும் ஐஸ்வர்யா ராய் குடும்பத்தில் பிரச்சனையா? எழுந்த சர்ச்சை!

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா தம்பதியினருக்கு, உலகமே வியந்து பார்க்கும் வகையில், தற்போது திருமண விழா நடந்து வருகிறது. இந்த விழாவில், ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில், நடிகர் அமிதாப் பச்சனும், அவரது குடும்ப உறுப்பினர்களும், ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வுக்கு சென்றுள்ளனர். அப்போது, அமிதாப் பச்சனுடன், அவரது மனைவி, மகள், மருமகன், மகளின் குழந்தைகள் ஆகியோர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

பின்னர், அபிஷேக் பச்சனும், அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால், ஐஸ்வர்யரா ராயும், அவரது மகள் ஆராத்யாவும், இவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை.

இவர்கள் இருவரும், அந்நிகழ்வில் தனியாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இவ்வாறு தனித்தனியாக இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டது, சமூக வலைதளங்களில் புகைச்சலை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே, ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும், விவாகரத்து செய்துக் கொள்ள உள்ளனர் என்று தகவல் பரவி, சர்ச்சையை கிளப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News