Connect with us

Raj News Tamil

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இதுதானா? 2 வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடை?

சினிமா

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இதுதானா? 2 வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடை?

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி, கடந்த 2022-ஆம் ஆண்டு அன்று, இனி பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் இடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த தம்பதி, நேற்று குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் பிரிவதற்கான காரணம் குறித்து, தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது, “நடிகர் தனுஷ் எப்போதும் தனது நடிப்பு பணியில் ஆர்வம் மிக்கவர். இவர், தனது வேலைக்கு பிறகு தான் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரக் கூடியவர்.

இது தான் இவர்களது குடும்ப வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தியது” என்று பிரபல இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுமட்டுமின்றி, வேறு பல விஷயங்களும், இவர்களது திருமண முறிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top