சினிமா
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு – சிக்கிய வேலைக்கார பெண்..!
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் லாக்கரில் இருந்த நகைகள் குறித்து தெரியும் என புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி (40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஈஸ்வரியின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டாதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈஸ்வரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
You must be logged in to post a comment Login