சினிமா
உயிரிழந்த தந்தை – அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன விஜய்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தந்தை பாலசுப்பிரமணியத்திற்கு 84 வயதாகிறது. கடந்த 4 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி, அவர் உயிரிழந்தார். மேலும், சென்னை பெசன்ட் நகரில் உள்ள சுடுகாட்டில், சுப்ரமணியத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த தகவலை அறிந்த அஜித்தின் ரசிகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும், தங்களது இரங்கல்களை கூறி வந்தனர். இதற்கிடையே, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்ற தளபதி விஜய், அவருக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login